முதலாவது நிகழ்வு காலை 6.55 மணிக்கும், இரண்டாவது நிகழ்வு மதியம் 12 மணிக்கும், மூன்றாம் நிகழ்வு மாலை 3 மணிக்கும், நான்காம் நிகழ்வாக மாலை 6.30 மணிக்குமாக நிகழ்வுகள் நடைப்பெற்றன நான்கு நிகழ்வுகளிலும் மண்டபம் நிறைந்து மக்கள் காணப்பட்டனர். சுமார் 30 தொடக்கம் நாற்பதினாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டு டாவீரர்களுக்கு வணக்கம் செய்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது நிகழ்வானது தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆலய மணி ஒலிக்க துயிலும் இல்லப் பாடல் ஒலிக்க தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றும் அதே நேரம் இங்கும் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லப் பாடல் இறுவட்டில் இசைக்க தலைவர் ஈகைச் சுடர் ஏற்றும் காட்சி காணொளியில் காட்சிப்படுத்தப்பட துயிலும் இல்லத்தில் மாவீரர் குடும்பங்கள் கதறியழும் காட்சி வலம் வர மண்டப நிறைந்த மக்களோடு மிக எழுச்சியுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன. எழுச்சி நடனங்கள், வானம்பாடிகளின் எழுச்சிப்பாடல்கள்,பிமுகர் சிறப்புரைகள், நாடகம் பரதநாட்டியம் என அனைத்து நிகழ்ச்சிகளும் மாவீரர் புகழ் சுமந்து அரங்கேறியிருந்தன. இந்த ஆண்டில் நடைப்பெற்ற மாவீரர் நிகழ்வு தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
மாவீரர் நாள் நிகழ்வை உலகெங்கும் வாழும் பல்லாயிரக்கணக்காகன தமிழ் மக்கள் பார்வையிட கனடிய தமிம் இழையோரது இணையத்தளத்தில் நேரடி ஒலிப்பரப்பு செய்யப்பட்டிருந்தது.